மாவட்ட செய்திகள்

பெரியபாளையம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

பெரியபாளையம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபாக பலியானார்.

தினத்தந்தி

தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு கிராமம் அய்யனார்மேடு காலனியில் வசித்து வருபவர் குமார். இவருடைய மருமகன் ஸ்டாலின் (வயது 36). இவர் தனது மனைவி பிரியங்கா மற்றும் 2 பிள்ளைகளுடன் சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ஸ்டாலின் சிறுவாபுரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் குளத்தில் கை, கால் கழுவ முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஸ்டாலின் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.

பலி

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குளத்தில் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள், அவர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான ஸ்டாலின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு