மாவட்ட செய்திகள்

கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

வருசநாடு அருகே கரடி தாக்கி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

தேனி :

விருதுநகர் மாவட்டம் கிழவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருடைய தந்தை தேனி மாவட்டம் வருசநாடு அருகே பாலசுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வத்தின் தந்தை உயிரிழந்தார்.

இந்த நிலையில் தந்தையின் இறுதி சடங்கிற்காக செல்வம் பாலசுப்பிரமணியபுரத்துக்கு வந்தார். பின்னர் நேற்று காலை அவர் ஊருக்கு புறப்பட்டார். அப்போது பஸ்சில் செல்லாமல் வருசநாடு அருகே காமராஜபுரத்தில் இருந்து கிழவன்கோவிலுக்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்றார்.

அப்போது வனப்பகுதியில் புதரில் மறைந்து இருந்த கரடி செல்வத்தை சரமாரியாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த செல்வம் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடி தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு