மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தானிப்பாடி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை கிராமிய துணைபோலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் ஆத்திப்பாடி மலை கிராமத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் காட்டுப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் 300 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாலுகா தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 28) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு