செய்திகள்

கீழ்வேளூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

கீழ்வேளூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட குழுவை கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி குக்கிராமங்களிலும் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதியில் திருக்குவளை மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று கீழ்வேளூர் சந்தை தோப்பு, ஆழியூர், ஒக்கூர், வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனர்.

இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு