தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

உல்லால் அருகே, 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பெங்களூரு;

பெங்களூரு உல்லால் உபநகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகன் ஸ்ரேயாஸ்(வயது 16). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரேயாஸ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவனது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பள்ளியில் நடந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்து காணப்பட்ட ஸ்ரேயாஸ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்