ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சாய்கண்ட் கிராமத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சம்பவத்தில் வெடிக்காத நிலையில் சில குண்டுகள் அந்த பகுதியில் கிடந்துள்ளன.
இந்த நிலையில், அப்பகுதியில் அமைந்த வீட்டில் இருந்து, துப்பாக்கி சூடு தாக்குதலினால் சேதமடைந்த பொருட்களை சிலர் அப்புறப்படுத்தினர். அதில் இருந்த வெடிக்காத நிலையிலான குண்டுகளை முஷாரப் பயா (வயது 10) என்ற சிறுவன் எடுத்துள்ளான். அது திடீரென வெடித்துள்ளது.
இதில் காயமடைந்த அந்த சிறுவன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவன் உயிரிழந்து விட்டான்.
#kashmir #boy #shell #explosion