தேசிய செய்திகள்

கங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் காயம்

பீகாரில் கங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சாப்ரா,

பீகாரின் சப்ரா நகரில் இருந்து சூரத் நோக்கி செல்லும் தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 9.45 மணியளவில் சாப்ரா நகரின் கவுதம் ஆஸ்தான் பகுதியில் வந்தபொழுது விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரெயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மீட்பு குழுவினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் பீகாரின் சஹடாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 பயணிகள் பலியாகினர் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.