தேசிய செய்திகள்

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழர்கள் உட்பட 25 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 21 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஒரு லாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், செம்மரம் வெட்டப் பயன்படும் ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு