தேசிய செய்திகள்

5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை; சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு

நிலத்தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.

தினத்தந்தி

சிவமொக்கா;

நிலத்தகராறு

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் ஹாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சையத் மாஜர் (வயது 58). இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஹதிக் அகமது. இவர்கள் இருவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஹதிக் அகமது தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து சையத்தை தாக்கியதுடன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சையத், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவமொக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹதிக் அகமது மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர்.

3 ஆண்டுகள் தண்டனை

இதுதொடர்பாக அவர்கள் 7 பேர் மீதும் சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி முஸ்தபா உசேன் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது கைதான 7 பேரில் ஹதிக் அகமது உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், 5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 2 பேர் மீது சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்