தேசிய செய்திகள்

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் சி.பி.ஐ. வாதம் தொடங்கியது: டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை 1-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான 2ஜி மேல்முறையீட்டு வழக்கில் சி.பி.ஐ. வாதம் தொடங்கியது. அதன் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் 1-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி, ஆ.ராசா, கனிமொழி உள்பட 17 பேரையும் விடுதலை செய்து அப்போதைய நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அதற்கு மறுநாள், சி.பி.ஐ. சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள், டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ. தனது வாதத்தை தொடங்கியது.

சி.பி.ஐ. வாதத்தை கேட்ட நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை