தேசிய செய்திகள்

சென்னகேசவா கோவிலில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சாமி தரிசனம்

சென்னகேசவா கோவிலில் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் சாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

ஹாசன்: கர்நாடக கவர்னராக இருப்பவர் தாவர்சந்த் கெலாட். இவர் இன்று சிவமொக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும்போது ஹாசன் மாவட்டத்துக்கு வந்தார். அப்போது அவர், பேளூரில் உள்ள புகழ்பெற்ற சென்னகேசவா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் சய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னகேசவா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் உள்ள கற் சிற்பங்களை பார்த்து ரசித்தார்.

இதையடுத்து அவர் அலேபீடு பகுதியில் உள்ள ஒய்சாலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கவர்னர் கெலாட், அங்கிருந்து காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையொட்டி பேளூர் சென்னகேசவா கோவில், அலேபீடு ஒய்சாலேஸ்வரர் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு