தேசிய செய்திகள்

சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களை லட்சாதிபதியாக்க திட்டம் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங்

சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களை லட்சாதிபதியாக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

தினத்தந்தி

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சகாப்பூரில் பெண்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் கண்காட்சியை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்தியாவில் 86 ஆயிரம் சுய உதவிக்குழுக்களில் 9 கோடி பெண்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் இந்த சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ.6.26 லட்சம் கோடியை அரசு வழங்கி உள்ளது. சுய உதவிக்குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் லட்சாதிபதி ஆக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு ஆகும். இதற்கான பாதையில் நாங்கள் இயங்கி வருகிறோம். லட்சாதிபதி தீதி திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

தானே மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களில் பெண் உறுப்பினர்களின் வருமானம் உயரும், இதனால் மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு