புதுடெல்லி,
கொரோனா பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி, சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தம் அடிப்படையில், 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை நாளை (வியாழக்கிழமை) முடிவடைய இருந்தநிலையில், அக்டோபர் 31-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவித்தது. இருப்பினும், தேவை அடிப்படையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படலாம் என்றும், சரக்கு போக்குவரத்துக்கு இத்தடை பொருந்தாது என்றும் கூறியுள்ளது.