போபால்,
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் - பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை கார் சென்றுகொண்டிருந்தது.
அந்த காரில் 4 பேர் பயணித்தனர். இதில் ஒருவர் போட்டித்தேர்வில் பங்கேற்க சென்றுள்ளார்.
இந்நிலையில், நெடுஞ்சாலையில் மகராஜ்புரா பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. பனிமூட்டமான காலை வேலையில் நடந்த இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.