தேசிய செய்திகள்

கன்ஷிராமுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை

நாட்டு மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தியதில் கன்ஷிராமின் பங்களிப்பு ஒப்பற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு நேற்று பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கும் இந்த உயரிய விருது வழங்க வேண்டும் என அந்த கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், 'கன்ஷிராம் ஜிக்கும் மத்திய அரசு விரைவில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சமூக மாற்றத்தின் மிகப்பெரிய தலைவரான அவர், கோடிக்கணக்கான தலித் மக்களுக்கு அரசியல் வலிமையை வழங்கினார். நாட்டு மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தியதில் அவரது பங்களிப்பு ஒப்பற்றது' என குறிப்பிட்டு இருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்