கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்

அவதூறு வழக்கில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

பீகார் மாநில துணை முதல்-மந்திரி, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ். இவர் கடந்த மார்ச் 21-ந் தேதி பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'குஜராத்தியர்கள் மட்டுமே மோசடிப் பேர்வழிகளாக இருக்க முடியும்' என்றார். இதுதொடர்பாக, குஜராத் ஆமதாபாத்தைச் சேர்ந்த தொழிலபதிபரும், சமூக சேவகருமான ஹரேஷ் மேத்தா, அங்குள்ள பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். தேஜஸ்வி யாதவ் பேசியதற்கான சான்றையும் அவர் சமர்ப்பித்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட கோர்ட்டு, தேஜஸ்வி யாதவுக்கு எதிராக போதுமான ஆதாரம் இருப்பதாக கூறி, அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக வருகிற செப்டம்பர் 22-ந் தேதி கோர்ட்டில் தேஜஸ்வி யாதவ் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு