கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கனடாவில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்புக்கு இந்தியா எதிர்ப்பு

கனடாவில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்புக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக்கோரி, அங்கு 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்தின. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காலிஸ்தான் வாக்கெப்பு என்பது கேலிக்கூத்தான செயல். ஒரு நட்பு நாட்டில், பிரிவினை அமைப்புகளால் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் அனுமதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.தூதரக வழிமுறைகள் மூலம் கனடா அரசிடம் இப்பிரச்சினையை எடுத்துச்சென்றுள்ளோம். தொடர்ந்து வலியுறுத்துவோம்.அதற்கு கனடா, இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் மதிப்பதாகவும், வாக்கெடுப்பை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தது என்று அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு