தேசிய செய்திகள்

ரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டு - 166 வருடங்களில் இல்லாத சாதனை

ரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டாக, 166 வருடங்களில் இல்லாத சாதனை முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயில் நடப்பு நிதியாண்டில் எந்த ரெயில் விபத்திலும் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதிவரையிலான 11 மாத காலத்தில் எந்த ரெயில் விபத்திலும் ஒரு ரெயில் பயணி கூட உயிரிழக்கவில்லை. கடந்த 1853-ம் ஆண்டு ரெயில்வே சேவை அமலுக்கு வந்ததில் இருந்து 166 ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சாதனை நிகழ்த்தப்படுவது, இதுவே முதல்முறை ஆகும்.

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பை மேம்படுத்த ரெயில்வே துறை எடுத்துக்கொண்ட முயற்சிகளே இதற்கு காரணம். தண்டவாளம் புதுப்பித்தல், தண்டவாள பராமரிப்பு, சிக்னல்கள் பராமரிப்பு, பழைய பெட்டிகளை அகற்றி விட்டு, நவீன பெட்டிகளை இணைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களால்தான், இந்த மைல்கல் சாதனை சாத்தியமானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்