மும்பை,
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.82 ஆக உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பால் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.73-ஐ நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.13 ஆகவும், டீசல் விலை ரூ.78.36 ஆகவும் விற்பனை ஆகிறது.