தேசிய செய்திகள்

கேரள சட்டசபை தேர்தல்: 4.34 லட்சம் போலி வாக்காளர்கள் என அதிர்ச்சி தகவல்

கேரள சட்டசபை தேர்தலில் 4.34 லட்சம் போலி வாக்காளர்கள் பெயர் பட்டியலில் உள்ளது என காங்கிரஸ் அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.

14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் வருகிற ஜூன் 1ந்தேதியுடன் நிறைவடைகிறது. 15வது சட்டசபைக்கான தேர்தலில் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மற்றும் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா கேரள ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, கேரள சட்டசபைக்கான தேர்தலில் போலியாகவும் மற்றும் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் பலமுறை பதிவு செய்யப்பட்ட 4 லட்சத்து 34 ஆயிரத்து 42 பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

அவற்றை அழிக்க அல்லது முடக்குவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கேரள சட்டசபை தேர்தலுக்காக போலியான மற்றும் பலமுறை பதிவான பெயர்களுடன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்து அலுவலக பணி விதிகளை மீறும் வகையில் உதவி புரிந்தவர்கள் உள்பட இதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து ரமேஷின் மனுவின்படி பலமுறை பதிவான பெயர்களை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திடம் கேரள ஐகோர்ட்டு இன்று கேட்டு கொண்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு