தேசிய செய்திகள்

மத்திய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நீதி விசாரணை; கேரள அரசு முடிவு

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளை விசாரித்துவரும் அமலாக்க இயக்ககம் உள்ளிட்ட தேசிய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக கேரள அரசு வட்டாரங்கள் கூறுகையில், தங்கம் மற்றும் டாலர் கடத்தல் வழக்கு விசாரணையை தடம்புரளச் செய்யும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு எதிராக ஒரு நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்க மாநில மந்திரிசபை முடிவெடுத்துள்ளது.

தற்போது, தேர்தல் தொடர்பான மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளதால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றபின் சம்பந்தப்பட்ட ஆணையம் நியமிக்கப்படும் என்று தெரிவித்தன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்