தேசிய செய்திகள்

மர்ம நபர்கள் பைக்கில் வந்து வாளால் வெட்டியதில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 2 பேர் காயம்

கேரளாவில் மர்ம நபர்கள் பைக்கில் வந்து வாளால் வெட்டியதில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கோழிக்கோடு,

கேரளாவின் கோழிக்கோட்டில் குட்டிகாட்டூர் பகுதி அருகே பைக்கில் வந்த சிலர் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் 2 பேர் மீது வாளால் வெட்டி இன்று காலை தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பிரணவ் மற்றும் சுதீஷ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்