தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ - 15 பேர் காயம்

மேற்கு வங்காளத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஹால்டியாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 15 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT