தேசிய செய்திகள்

52,686 கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசூகி அறிவிப்பு

கோளாறு காரணமாக 52,686 கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்து உள்ளது. #MarutiSuzuki

தினத்தந்தி

புதுடெல்லி,

கார் உற்பத்தி சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி, பலேனா மற்றும் புதிய ஸ்விப் மாடல் கார்கள் 52,856- ஐ திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பிரேக் வேக்கம் ஹோஸில் (brake vacuum hose) கோளாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதால், மேற்கூறிய இரு மாடல் கார்களையும் ஆய்வு செய்ய திரும்ப பெறுவதாக நிறுவனம் அறிவித்து உள்ளது.

டிசம்பர் 1,2017 முதல் மார்ச் 16,2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக கார்கள், ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 14 ஆம் தேதி முதல், குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வாங்கிய கார் உரிமையாளர்கள், டீலர்களை தொடர்பு கொண்டு கார்களை ஆய்வுக்கு உட்படுத்தி, சீர் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சேவை செய்யப்படும் என்று மாருதி சுசூகி அறிவித்து உள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனா மாடல் கார்கள் திரும்ப பெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த மே 2016 ஆம் ஆண்டு ஏறத்தாழ 75,419 கார்களை, ஏர்பேக்கில் பிரச்சினை இருப்பதாக கூறி திரும்ப பெற்றது நினைவிருக்கலாம்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு