தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 600 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைய தொடங்கியது. இதன்படி, காலை 9.30 மணியளவில் 665.03 புள்ளிகள் உயர்ந்து (1.19 சதவீதம்) 56,487.04 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உலோகம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பிற துறைகள் லாபமடைந்து காணப்பட்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வர்த்தகம் தொடங்கியதும் இன்று காலை 9.30 மணியளவில் 193.00 புள்ளிகள் உயர்ந்து (1.16 சதவீதம்) 16,807.20 புள்ளிகளாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 1,100 புள்ளிகள் சென்செக்ஸ் குறியீடு சரிந்த நிலையில் இன்று உயர்ந்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்