தேசிய செய்திகள்

பழிவாங்குதல், வன்முறைக்கு இந்தியாவில் இடமில்லை : பிரியங்கா காந்தி வத்ரா

பழிவாங்குதல், வன்முறைக்கு இந்தியாவில் இடமில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

லக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடினார். பிரியங்கா காந்தி தனது பேட்டியின் போது கூறியதாவது; - என்னுடைய பாதுகாப்பு என்பது மிகப்பெரிய விஷயம் அல்ல. அதுகுறித்து நான் ஆலோசிக்கவில்லை.

பொதுமக்களின் பாதுகாப்பு தான் உத்தர பிரதேசத்தில் பிரச்சினையாக உள்ளது. காவி நிறம் என்பது இந்துமதத்தைக் குறிக்கிறது. அது வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தில் பழிவாங்குதலுக்கும், வன்முறைக்கும் இடம் இல்லை.

மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று அறியமுடியாமல் மக்கள் கவலைப்படுகிறார்கள். இதுபோன்று மாநில அரசு செய்வது அராஜகம். யாருக்கும் வேலையில்லை, வேலையின்மை நிலவுகிறது. பெண்கள் பாதுகாப்பற்ற சூழலாக உணர்கிறார்கள்.

இதைக்காட்டிலும் பெரிய பிரச்சினைகள் இருக்கும் போது அற்பமான விஷயங்களை அரசு எழுப்புகிறது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு