தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் குஜராத், இமாசலபிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இதை குறிப்பிட்டு, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதை முதல்-மந்திரி பகவந்த் மான் நிறைவேற்றி இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு வாழ்த்துகள். புதிய ஓய்வூதிய திட்டம் நியாயமற்றது. நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தல் நடக்க உள்ள குஜராத், இமாசலபிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், அங்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு