கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

சமையல் எரிவாயு திட்ட மானியத்துக்கு மத்திய அமைச்சரவை 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.603-க்கு மானியத்துடன் சிலிண்டர் கிடைக்கும். மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்