தேசிய செய்திகள்

ஆய்வகத்தில் வாயுக் கசிவு 30 மாணவிகள் பாதிப்பு

கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டதால் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

ஐதராபாத்

ஐதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் உள்ள மேற்கு மாரேட்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அனைத்து மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை அப்பகுதியினர் உதவியுடன் பள்ளி ஊழியர்கள் கீதா நர்சிங் ஹோமில் சேர்த்தனர்.

ஆனால், கல்லூரி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்படவில்லை என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கல்லூரி எல்லைச் சுவரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசியதால், மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர் என கூறி உள்ளது.

ஆய்வகத்தில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் வளாகத்தை ஆய்வு செய்தது. எரிவாயு கசிவு இல்லை என தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்