தேசிய செய்திகள்

நோயால் அவதிப்பட்ட 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை - ஐதராபாத்தில் சோகம்

ஐதராபாத்தில் நோயால் அவதிப்பட்ட 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தம்பதி தாங்களும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள குஷாய்குடா பகுதியை சேர்ந்த சதீஷ் - வேதா தம்பதிக்கு, 9 மற்றும் 5 வயதில் இரு ஆண் குழந்தைகள் இருந்தன. இந்த குழந்தைகள் இருவருக்கும், பிறந்தது முதல் உடல் நிலையில் தீவிர பாதிப்புகள் இருந்து வந்தன. எனவே, மகன்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்க, கடந்த பல ஆண்டுகளாக, அந்த தம்பதி தாங்கள் சம்பாதித்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய பணம் ஆகியவற்றை செலவு செய்தனர்.

எனினும், குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்ததால், மனவேதனை அடைந்த தம்பதி இருவரும், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். பின்னர் இரண்டு பேரும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு