தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை

பிரதமர் மோடி இன்று காணொலி காட்சியின் மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரையாற்ற உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. நவராத்திரி விழாவையொட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துர்கா பூஜை வாழ்த்து செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் உரையாற்றுவதை மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப, அந்தந்த மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒவ்வொன்றிலும் 25-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களையும், வாக்காளர்களையும் திரட்ட ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு