கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நவம்பர் 5ஆம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி!

வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் செல்ல உள்ளார்.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோவில்கள் பிரசித்தி பெற்றவை. அதில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில், குளிர்காலத்தை ஒட்டி அடுத்த மாதம் 6-ந் தேதி மூடப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு ஒருநாள் முன்னதாக 5-ந் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல உள்ளார். அப்போது அவர், ரூ.400 கோடி மதிப்பீட்டிலான கேதார்புரி மறுகட்டுமான திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.

கேதார்நாத்துக்கு பிரதமரின் வருகையை உறுதிப்படுத்திய உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, கோவிலில் வழிபடும் மோடி, கேதார்புரி மறுகட்டுமானப் பணிகளை தொடங்கிவைப்பதுடன், ஆதி சங்கராச்சாரியாரின் சிலை ஒன்றையும் திறந்துவைப்பார் என்று கூறினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?