தேசிய செய்திகள்

பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை - மோடிக்கு சத்யபால் மாலிக் எச்சரிக்கை

அதிகாரம் வரும்,போகும் பிரதமர் மோடி இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யபால் மாலிக் பேசியதாவது,

அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை, அப்பதவியில் இருந்து ஒருநாள் விலக வேண்டுமென்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.

நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளைஞர்களின் இயக்கமும் தொடங்கும் என என மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக சத்யபால் மாலிக் கூறியது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு