தேசிய செய்திகள்

அவதார திருநாளில் அய்யா வைகுண்டருக்கு பிரதமர் மோடி புகழாரம்

அய்யா வைகுண்டர் அவதார திருநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் செலுத்தி டுவிட்டரில் ஒரு பதிவினை நேற்று வெளியிட்டார்.

புதுடெல்லி,

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார திருநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் செலுத்தி டுவிட்டரில் ஒரு பதிவினை நேற்று வெளியிட்டார்.

அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

அய்யா வைகுண்டர் சுவாமிகளுக்கு அவரது அவதார திருநாளில் புகழஞ்சலி. அவர் பிறருக்கு தொண்டுகள் செய்வதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்கவும் சமூகத்துக்கு தன்னையே அர்ப்பணித்தவர் ஆவார்.

நலிவுற்றோருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அவர் எண்ணற்ற முயற்சிகளை எடுத்துள்ளார். அவரது சிந்தனைகள், தலைமுறைகள் தோறும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை