ஜோத்பூர்,
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. ஈரானிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவிலான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக, ஈரானில் சுமார் 600 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதையடுத்து, மத்திய அரசின் ஏற்பாட்டின் படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், 2-வது கட்டமாக மேலும் 275 இந்தியர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு, அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாம் அழைத்து செல்லப்படுகின்றனர்.