தேசிய செய்திகள்

முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஜனாதிபதிக்கு கடிதம்

முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஜனாதிபதிக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியை உருவாக்கியவர் முலாயம் சிங் யாதவ். இவர் 3 முறை உத்தரபிரதேச முதல்-மந்திரியாகவும், 1 முறை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார்.

இதனிடையே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் கடந்த திங்கட்கிழமை தனது 82 வயதில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர். முலாயம் சிங்கின் உடல் உத்தரபிரதேசத்தின் சைபி நகரில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முலாயம் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஜனாதிபதிக்கு சமாஜ்வாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆக்ரோ - லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை தர்டிபுத்ரா முலாயம் சிங் யாதவ் எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர் மாற்ற வேண்டுமென சமாஜ்வாதி கட்சி செய்தித்தொடர்பாளர் ஐபி சிங் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு