தேசிய செய்திகள்

புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுனில் அரோரா நியமனம் 2–ந் தேதி பதவி ஏற்கிறார்

தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி.ராவத், இந்த வாரம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக, தற்போதைய தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

சுனில் அரோரா, டிசம்பர் 2ந் தேதி பதவி ஏற்கிறார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.

சுனில் அரோராவுக்கு வயது 62. 1980ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவர். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.