தேசிய செய்திகள்

சாலை தடுப்பு சுவரில் மோதி டேங்கர் லாரி தீப்பிடித்தது

துமகூரு அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

துமகூரு:

துமகூரு அருகே கூலூரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வேகமாக தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. உடனே லாரி தீப்பிடித்து எரிந்தது.

லாரி கவிழ்ந்ததும் டிரைவரும், கிளீனரும் வெளியே வந்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் உயிர் தப்பினர். இந்த தீவிபத்தில் டேங்கர் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. விபத்து தொடர்பாக துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்