தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் : ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீநகர் - பரமுல்லா சாலையில், காரில் சென்று கொண்டிருந்த பயங்கரவாதிகளை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூன்று பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை