புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நேற்று திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர் பஞ்சமும், பற்றாக்குறையும் நிலவுகிறது. கடந்த 6 மாதமாக போதுமான மழை இல்லை. காவிரி நதி நீரும் கிடைக்கவில்லை. மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத அவல நிலை நிலவுகிறது. இந்த பிரச்சினையை தேசிய பேரிடராக கருதி, தேசிய பேரழிவு நிர்வாக நிதியில் இருந்தும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்தும், தமிழ்நாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.