தேசிய செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய துணை முதல்-மந்திரியின் மகன்

உத்தரப்பிரதேசத்தில் துணை முதல்-மந்திரியின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவின் மகன் யோகேஷ் குமார் மவுரியா சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது.

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஆலம்பூர் புறவழிச்சாலை அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது யோகேஷ் மவுரியாவின் கார் டிராக்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு கல்பி போலீசார் விரைந்து வந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், "கல்பி அருகே விபத்து நடந்தது. விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, கார் சிறிது சேதமடைந்தது என்று கூறினார். விபத்து நடந்தபோது காரில் யோகேஷ் இருந்ததை எஸ்பி உறுதிப்படுத்தினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்