தேசிய செய்திகள்

மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் ராஜினாமா

மேற்கு வங்காள மாநில அரசு தலைமை வக்கீல் கிஷோர் தத்தா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தினத்தந்தி

இந்நிலையில் அம்மாநில கவர்னர் ஜெகதீப் தங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அரசியல் சாசனத்தின் 165-வது பிரிவின் அடிப்படையில், மேற்கு வங்காள அரசு தலைமை வக்கீல் பதவியில் இருந்து கிஷோர் தத்தாவின் ராஜினாமா உடனடியாக ஏற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் தலைமை வக்கீல் பதவி ஏற்ற கிஷோர் தத்தா, மம்தா பானர்ஜி ஆட்சிக்காலத்தில் இப்பதவியை ராஜினாமா செய்த 4-வது வக்கீல் ஆவார்.

இவருக்கு முன், அனிந்திய மித்ரா, பிமல் சட்டர்ஜி, ஜெயந்த மித்ரா ஆகிய அரசு தலைமை வக்கீல்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்