செய்திகள்

நான் இந்த தொடரில் சரியாக விளையாடவில்லை - இயன் மோர்கன் ஒப்புதல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் தான் சரியாக ரன் அடிக்கவில்லை என்று கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

அபுதாபி,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

இதற்கிடையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள மோர்கன் 111 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், அவரது பேட்டிங் குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியையடுத்து கொல்கத்தா கேப்டன் இயன் மோர்கன் போட்டிக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவரிடம் பேட்டிங் குறித்து வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மோர்கன், ஆம்... நடப்பு தொடரில் நான் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. குறைவான ரன்களையே அடித்துள்ளேன். நீண்ட காலமாக குறிப்பிடத்தக்க ரன்களை அடிக்காமல் செல்லும்போதும், அணிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க வேண்டும். அது அனுபவம் மூலம் வெளிப்படும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்