இவற்றின் ஜீவநாடியே சாம்பார் தான். சங்க இலக்கியத்தில் சாம்பாரின் ஆரம்பகால வடிவமான மோகன கலவை பற்றி குறிப்புகள் உள்ளது. அன்று இப்போது உள்ள நிறம் மற்றும் நீர்த்தன்மை அதற்கு இல்லை. தாளித்த பருப்பு வகையை போன்ற தன்மையில் அன்று இருந்தது என்று சமையல் நிபுணர் ராம் பிரகாஷ் கூறுகிறார்.
சாம்பார் பற்றி பல சுவாரசியமான கதைகள் இருந்தாலும், அதன் பெயர், மராத்திய வீரர் சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் நினைவாக வைக்கப்பட்டது என்பதே பிரபலமானது. ஒரு நாள், கடும் பசியில், நேரே சமையலறைக்கு சென்ற சாம்பாஜி, மராத்தி முறையில் பருப்பை சமைத்து உண்டார். அதுவே முதலில் செய்யப்பட்ட சாம்பார் எனப்படுகிறது.