தமிழக செய்திகள்

3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது

தேசூர் அருகே 3 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

சேத்துப்பட்டு

தேசூரை அடுத்த மஞ்சம்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 40), அதே தெருவை சேர்ந்தவர் கண்ணன் (60), கூலி தொழிலாளி.

இவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் பக்கத்து வீட்டில் தகர கொட்டகையில் சின்ன பாப்பா (75) என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வசந்தா, கண்ணன், சின்னபாப்பா ஆகியோரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் தெள்ளார் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது? மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்