தமிழக செய்திகள்

304 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

304 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தினத்தந்தி

ஆற்காடு கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி.என்.பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிசிரியை எம்.சாந்தி வரவேற்றார்.

ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 304 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதில் ஆற்காடு நகர தி.மு.க. செயலாளர் ஏ.வி.சரவணன், நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட பிரிதிநிதி ஆர்.கோபு மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்