தமிழக செய்திகள்

நாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன

நாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன.

வடகாடு அருகேயுள்ள புள்ளான்விடுதி பேப்பர் மில் அருகே கடந்த வாரம் புள்ளிமான் ஒன்று நாய்கள் கடித்ததில் செத்தது. இந்தநிலையில், வடகாடு சாத்தன் பட்டியில் 5 ஆடுகளை, 5 நாய்கள் சேர்ந்து கடித்ததில் செத்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் கோழிக்கழிவுகளை குழிதோண்டி புதைக்காமல் ஒரு சிலர் குளக்கரை பகுதிகளில் கொட்டி விடுவதால் அவைகளை தின்று ருசி கண்ட நாய்கள் வெறி கொண்ட நிலையில், ஒன்று திரண்டு இதுபோல் அவ்வப்போது ஆடு, மாடு மற்றும் கோழிகளை காவு வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சில சமயங்களில் பொதுமக்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை