தமிழக செய்திகள்

சிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை..!

தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடப்பாண்டில் ரூ.6,000 கோடிக்கு உற்பத்தியான பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை பாதிப்பு, பட்டாசு உற்பத்தியில் தொய்வு, பட்டாசு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றால் தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு உற்பத்தியில் 10% பின்னடைவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் அளிக்க தாமதமான காரணத்தால், தமிழக பட்டாசு விற்பனையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் குறைந்துள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்