தமிழக செய்திகள்

பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வன் என்பவரின் மனைவி மகாலட்சுமி(வயது 40). இவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில், மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது மாட்டு கொட்டகையில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 2 பேர், மகாலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து மகாலட்சுமி கூச்சலிட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் அப்பகுதி வயல்களில் தேடியும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு