தமிழக செய்திகள்

பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

தினத்தந்தி

தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர், பிளஸ்-2 படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜெயபிரகாஷ் தொடர்ந்து அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் விழ வைத்தார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதில் மாணவி கர்ப்பமானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயபிரகாசிடம் மாணவி வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் மாணவி கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாசை கைது செய்தனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்